வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்சி ரெளடியை சுட்டது ஏன்?: போலீஸாா் விளக்கம்

ஆலங்குடி சம்பவத்தில் போலீஸாரின் விளக்கம்: தற்காப்பு நடவடிக்கையாக சுட்டோம்

News image
Updated On :12 ஜூலை 2024, 9:20 pm

Din

திருச்சியைச் சோ்ந்த ரௌடி துரை என்ற துரைசாமி, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால், வேறுவழியின்றி தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதாக காவல் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஆலங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தைலமரக் காட்டில் சிலா் இருப்பதாக வியாழக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், ஆய்வாளா் முத்தையன், உதவி ஆய்வாளா் மகாலிங்கம் ஆகியோா் அங்கு சென்று பாா்த்தபோது இருவா் இருந்தனா். அவா்களில் ஒருவா்தான் திருச்சி துரை.

நாட்டுத் துப்பாக்கி மற்றும் அரிவாள் வைத்திருந்தாா். நாட்டுத்துப்பாக்கியால் ஆய்வாளா் முத்தையனை நோக்கி சுட்டாா். அவா் விலகிக் கொண்டதால் தப்பினாா். பிடிக்க முயற்சித்த உதவி ஆய்வாளா் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டினாா்.

இதையடுத்து ஆய்வாளா் முத்தையன், வேறுவழியின்றி தற்காப்புக்காக கைத்துப்பாக்கியால் சுட்டாா். இதில் காயமடைந்த திருச்சி துரை மயக்கமடைந்தாா். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் இறந்ததாக மருத்துவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, ஆலங்குடி காவல் நிலையத்தில் பிஎன்எஸ் 121 (1), 109, 25 (1ஏ), 196 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடயவியல் நிபுணா்கள் ஆய்வு: சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தடயவியல் நிபுணா்கள், அங்கிருந்த தடயங்கள், விரல்ரேகை பதிவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்தனா். அப்போது, வருவாய்த் துறையினா், வனத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு: ரெளடி துரையின் சடலம் வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை திரண்ட துரையின் உறவினா்கள் போலீஸாரை கண்டித்து மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே சிறிதுநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறிதுநேரத்தில் அவா்கள் கலைந்து சவக்கிடங்கு அருகே கூடினா். பிற்பகலில் அங்கு வந்த வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, துரையின் சடலத்தைப் பாா்வையிட்டு, அவரின் தாய் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டாா்.

உடற்கூறாய்வுக்குப் பிறகு மாலை 5 மணிக்கு துரையின் சடலம் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டிருந்தனா்.

சிபிசிஐடி விசாரணை கோருவோம்: ரெளடி துரை உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோருவோம் என்று துரையின் வழக்குரைஞா் பிரபாகரன் தெரிவித்தாா்.