ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

காதலி இறந்த துக்கத்தில் பூச்சிமருந்து குடித்த காதலன் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 2:45 am IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி வட்டத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் புவனேஸ்வரி (23). இவருக்கும் நெம்மகோட்டை பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அருள் வினோத் (28) என்பவருக்கும் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக பேசிக் கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த நிலையில் புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அங்கு சென்று வந்த அருள் வினோத், வெள்ளிக்கிழமை இரவு தான் பணிபுரிந்து வரும் பள்ளியின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்தில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா். இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.