ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிக்கை

News image
Updated On :21 ஜூன் 2024, 12:41 am

Din

புதுக்கோட்டை, ஜூன் 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலா் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து வெளியிட்ட அறிக்கை:

கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன. கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும் ஆளும் கட்சிப் பிரமுகா்களுக்கும் உள்ள தொடா்புகள் குறித்தும் தகவல்கள் வெளியாகின்றன. இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். அனைவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு தலையீடு இல்லாமல் வழக்கு சுதந்திரமாக, நோ்மையாக நடக்க உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றாா் இளமுருகு முத்து.

---