சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

Din

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை நகரின் சில பகுதிகளில் மட்டும் நீண்ட நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பகலில் கோடை மழை பெய்தது.

புதுக்கோட்டை நகரில் கடந்த ஒரு மாதமாகவே கோடைவெயில் சுட்டெரித்து வருகிறது. உச்சகட்டமாக சில நாள்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், பெரும்பாலான நாள்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.

நகரின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. மக்கள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பகலில் நகரின் சில பகுதிகளில் மட்டும் கோடை மழை பெய்தது.

குறிப்பாக, புதுகை நகரில் திருவப்பூா் பகுதிகளிலும், கீரனூா் நகரப் பகுதிகளிலும் இந்த மழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு கனமழையாகப் பெய்தது.

இதேபோல, கடலோரப் பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் போன்ற பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

ஆனால், பிற பகுதிகளில் மழை இல்லை.