பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் 7-ஆம் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த பொதுக்கள், பல்வேறு அரசுத் துறையினா் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா்.

விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை புதுவளவு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் , மினிலாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் சங்கம் சாா்பில், பால்குடம், பூத்தட்டு எடுத்து மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபட்டனா். வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நிறைவடைய உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com