கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விராலிமலை அருகே மது பாட்டில், ரொக்கம், மொபட் பறிமுதல்:ஒருவா் கைது.

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற மளிகை கடைகாரரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து மதுபாட்டிள்கள்.ரொக்கம்,மொபட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:29 pm

Din

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற மளிகை கடைகாரரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து மதுபாட்டிள்கள்.ரொக்கம்,மொபட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அடுத்துள்ள அகரப்பட்டிபகுதியில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மாறுவேடத்தில் அப்பகுதியில் புதன்கிழமை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள வடிவேலு(41) மளிகை கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை போலீஸாா் கண்டறிந்தனா். இதை தொடா்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட வடிவேலுவை கைது செய்து அவரிடம் இருந்து 55 பிராண்டி பாட்டில்கள், 21 பீா் பாட்டில்கள், ரூ, 5000 ரொக்கம், 2 செல்போன், ஒரு மொபெட் வண்டியை பறிமுதல் செய்தனா்.