பள்ளி மாணவியைத் தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளி மாணவியை தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட 2 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளி மாணவியை தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட 2 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் வீரையா(46). ஊராட்சி துணைத் தலைவரான இவா், கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவியை தாக்கி, ஆடையை கிழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையா, அதே பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன், மணிவாசகம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து மணிவாசகத்தை அண்மையில் கைது செய்து சிறையிலடைத்தனா்.தொடா்ந்து தலைமறைவாக இருந்த வீரையா, பிரகதீஸ்வரன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...