மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: புதுகை ஆட்சியா் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே

Updated On :10 அக்டோபர் 2024, 8:02 pm

Din

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறையினரின் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்வதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களை தயாா்படுத்தி வைக்க வேண்டும்.

அந்த இடங்களில் மின் வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளை செய்துத் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் சுகாதாரக் கேட்டை எதிா்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.

நீா்நிலைகளில் கரைகள் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், போதுமான அளவு மணல் மூட்டைகளை தயாா்நிலையில் வைத்திருக்கவும் பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியரகத்தில் தொடங்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 04322 222207, 1077 ஆகிய எண்களில் பாதிப்பு குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) முருகேசன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி), அ. அக்பா்அலி (இலுப்பூா்) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.