போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அங்கக வேளாண்மையில் சிறந்த விவசாயிகளுக்கு மாநில அரசு விருது

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாநில அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:16 pm

Din

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாநில அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது, அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ஆம் ஆண்டில் மாநில அளவில் தோ்வு செய்து அவா்களுக்கு விருதுடன் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ஆம் பரிசாக ரூ. 60 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சோ்ந்த சொந்த நிலத்தில் அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம், தோட்டக் கலைத் துறையின் இணையத்தளம் மற்றும் வட்டாரத் தோட்டக்கலை அலுவலகங்களில் கிடைக்கும்.

அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழு ஒப்புதலுடன், மாவட்டத்துக்கு ஒரு விண்ணப்பம் தோ்வு செய்யப்பட்டு தோட்டக்கலை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலான குழு உறுப்பினா்கள் பரிசீலனை செய்து விருதாளா்களைத் தோ்வு செய்வா்.