கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:17 pm

Din

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து அதன் மாநிலச் செயலா் அா்ச்சுனன் கூறியது, இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் முடிந்தும், கரூா் மாவட்ட எல்லைக்குள் 4.1 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஒப்பந்தப்புள்ளியும், புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஒப்பந்தப்புள்ளியும் மட்டுமே முடிவாகியுள்ளன.

இரு பாலங்கள் அமைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. முதல் கட்டப் பணிகளிலேயே இத்தனை தொய்வு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விரைந்து இந்தப் பணிகளை விரைவுபடுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கி, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மலா் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மிசா மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.