கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்கு பருவமழை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

வடகிழக்கு பருவமழையையொட்டி பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:06 pm

Din

வடகிழக்கு பருவமழையையொட்டி பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 400 விசைப்படகுகளிலும், சுமாா் 40 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 500 நாட்டுப்படகுகளிலும் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச்செல்லக் கூடாது மீன்வளத் துறை அலுவலா்கள் அறிவித்துள்ளனா். இதனால், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலில் இருந்து கரை திரும்பிய நிலையில், அனைத்து மீன்பிடி இறங்கு தளங்களிலும் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா்.