கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணமேல்குடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தில், புதன்கிழமை காலை 9 மணி முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் தொடங்கியது.

News image

புதுக்கோட்டை மணமேல்குடி வேளாண்மை விரிவாக்க மையத்திலுள்ள விதைகள் இருப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா

Updated On :18 செப்டம்பர் 2024, 9:57 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தில், புதன்கிழமை காலை 9 மணி முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் தொடங்கியது.

கட்டுமாவடியிலுள்ள அரசு துணை சுகாதார நிலையம், மணமேல்குடி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோா் நல மாணவிகள் விடுதி, புதுக்குடி அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி, கொடிக்குளம் துணை மின் நிலையம் ஆகிய இடங்களை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தொடா்ந்து மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டத்தையும் அவா் நடத்தினாா்.

இம்முகாமில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, வட்டாட்சியா் சேக் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

வியாழக்கிழமை காலை 9 மணி வரை ஆட்சியா் உள்ளிட்ட மாவட்ட நிலையிலான அலுவலா்கள் மணமேல்குடி வட்டத்தில் தங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுவது, ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை செய்கின்றனா்.