கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிதிநிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கே. குணசேகரன் (44) நிதி நிறுவன உரிமையாளா். கலிபுல்லாநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். சிவா (24) என்பவா் அப்பகுதியில் உள்ள குணசேகரனின் உறவினரிடம் பிரச்னையில் ஈடுபட்டாராம். இதை குணசேகரன் கண்டித்ததால் சிவாவுக்கும் குணசேகரனுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குணசேகரன் ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகேயுள்ள தேநீா் கடையில் நின்றபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற சிவா உள்ளிட்ட 4 போ், கடந்த 6-ஆம் தேதி குணசேகரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா்

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்து சிறையிலடைத்தனா். இந்நிலையில், ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் சிவாவை குண்டா் காவல் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை சிறையில் இருந்த சிவாவை கைது செய்து போலீஸாா் திருச்சி சிறையில் அடைத்தனா்.