கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுகையில் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் புதன்கிழமை பனை விதை விதைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்

Updated On :25 செப்டம்பர் 2024, 11:19 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று, பனை விதைகள் விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் கே. செல்வகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மன்னா் கல்லூரி மாணவா்கள் மூலம் நடைபெற்ற இந்த விதைப்பில், சுமாா் 1000 விதைகள் கவிநாடு கண்மாயில் விதைக்கப்பட்டன.