திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

ராமேசுவரம் - பனாரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்...

News image

ரயில்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 2:25 pm IST

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வாரம்தோறும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலையத்துக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில் கூடுதலாக புதுக்கோட்டையில் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, நள்ளிரவு 3.33 மணிக்கு புதுக்கோட்டை ரயில் நிலையம் வரும் இந்த ரயில், 2 நிமிடங்கள் நின்று 3.35 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கு வழக்கம்போல் காலை 5.10 மணிக்கு செல்லும் ரயில் 5.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Summary

Southern Railway has announced that the weekly train from Rameswaram to Banaras will be standing at the Pudukkottai railway station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.