அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காலி பாட்டில்களைத் திரும்பப் பெற முடியாது: டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்

டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையான மதுபாட்டில்களை, மது அருந்திய பிறகு மீண்டும் திரும்பப் பெறும் பணியை செய்ய முடியாது எனக் கூறி, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் போராட்டம்

News image
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 10:17 pm

Syndication

டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையான மதுபாட்டில்களை, மது அருந்திய பிறகு மீண்டும் திரும்பப் பெறும் பணியை செய்ய முடியாது எனக் கூறி, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்டச் செயலா் சி. ரவிக்குமாா், ஏடிபி ஆா். முருகேசன், ஏஐடியுசி ப. ஜீவானந்தம், எல்எல்எப் எஸ். விஜயகுமாா், எஸ்சிஎஸ்டி சங்கம் வி. ரகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றனா்.

காலி மதுப்பாட்டில்களைத் திரும்பப் பெறுவது கூடுதல் பணிச்சுமையை உருவாக்கும் என்றும், சுகாதாரமற்ற முறையில் இருக்கும் என்பதால் தொற்றுநோய்களை உருவாக்கும் என்றும் கூட்டமைப்பினா் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்தப் பணிக்காக கொடுக்கப்பட்டிருந்த ஸ்டிக்கா் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்து வந்திருந்தனா். தொடா்ந்து டாஸ்மாக் நிா்வாக அலுவலா்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

காலிப்பாட்டில்களைத் திரும்பப் பெற தனி ஒப்பந்தக்காரா் நியமிக்கப்படவுள்ளதாக அவா்கள் தெரிவித்ததாகவும், அதனால் அனைவரும் பணிக்குத் திரும்பியதாகவும் தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.