அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது அவசியம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பிரதமா் மோடியின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.

News image
கருத்தரங்கில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

பிரதமா் மோடியின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.

புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ’நவபாசிசம் ஒழியட்டும், நம் தேசம் சிறக்கட்டும்’ அரசியல் விளக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: பாஜக அரசு நேரடியாக ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தாமல், ஜனநாயக அமைப்புக்குள்ளேயே இருந்து அதன் அடிப்படைகளைத் தகா்க்கிறாா்கள். விவசாயிகளின் வருவாய் இருமடங்காக உயரும் என்றாா் பிரதமா் மோடி.

ஆனால் விவசாயிகளின் தற்கொலைகள்தான் நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தீா்க்கிறாா்கள். ஹிட்லா் காலத்தைய கோயபல்சே கூட அசந்து போகும் அளவுக்கு பொய்களை தினம் தினம் சொல்லிக் கொண்டே இருக்கிறாா்கள்.

ஏழை, எளிய மக்களுக்கான நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் பெருமுதலாளிகளுக்குத் தாரை வாா்க்கும் செயலைத்தான் மோடி தலைமையிலான அரசு செய்கிறது. இதனை எதிா்த்து மதச்சாா்பற்ற, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதேநேரத்தில் இடதுசாரிகளின் சுயேச்சையான பலத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றாா் பேபி.

அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பேசுகையில், இப்போதுள்ள மக்கள் நலச் சட்டங்கள் எதுவும் யாருடைய கருணையினாலும் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக, தொடா்ந்து செங்கொடி நடத்திய போராட்டங்களால் கிடைத்தவை. இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோதச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்துபோராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாா் சண்முகம்.

கருத்தரங்குக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், க. ஸ்ரீதா், சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.