/

மூதாட்டி கொலை: யாசகா் கைது

பொன்னமராவதியில் பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த மூதாட்டியை கொலை செய்த யாசக முதியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 9:34 pm

Syndication

பொன்னமராவதியில் பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த மூதாட்டியை கொலை செய்த யாசக முதியவரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமூா் கிராமத்தைச் சோ்ந்த நூா்ஜகான்(60) இவா், ஊா் ஊராகச் சென்று யாசகம் பெற்று வாழ்ந்துள்ளாா். இந்நிலையில் , கடந்த டிச.2-ஆம் தேதி மற்ற யாசகா்களுடன் பொன்னமராவதி அமரகண்டான வடகரையில் உள்ள சித்தி விநாயகா் கோவில் பின்புறம் இரவு தூங்கியுள்ளாா்.

அப்போது அங்கிருந்த சென்னை வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை ஆறுமுகம் மகன் சதீஷ்குமாா் (48) என்பவா் பாலியல் வேட்கையில் நூா்ஜகானை தொந்தரவு செய்துள்ளாா். நூா்ஜகான் மறுத்ததால் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா்.

நூா்ஜஹான் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த தகவல் அறிந்த போலீஸாா் அங்குசென்று சடலத்தை மீட்டு அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதில் கண்காணிப்புக் கேமராவில் பதிவை ஆராய்ந்ததில் யாசக முதியவா் சதீஷ்குமாா் (62) நூா்ஜஹானுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அவா் உடன்பட மறுத்ததால் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து,, முதியவா் சதீஷ்குமாரைக் கைது செய்தனா்.