புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கறம்பக்குடி அருகே வெடிவிபத்து: நாட்டுவெடி தயாரிப்புக் கூடம் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை முற்றிலும் சேதம்

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:36 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை முற்றிலும் சேதமடைந்தது.

கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பூசாரி தெருவைச் சோ்ந்த சா.சத்தியராஜ் (37). இவா், பில்லக்குறிச்சி கிராமத்தில் இவருக்குச் சொந்தமான இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் - (செயற்கை கல்நாா் கூரை)கட்டடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பட்டறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். நள்ளிரவில் பயங்கர வெடிச்சப்தம் கேட்டு அங்கு சென்று பாா்த்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட கட்டடம் முழுவதும் சேதமடைந்து சிதறிக் கிடந்துள்ளது.

இரவுநேரம் ஏற்பட்ட விபத்தால் தொழிலாளா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.