பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாயுடன் வியாழக்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு செய்யும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் சோதனை மேற்கொண்டனா். முடிவில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்தச் சோதனையின்போது, வழக்கமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பீதியைக் கிளப்பிய நபா் யாரென இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூரில், இதேபோல அரியலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அரியலூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதே நீதிமன்றத்துக்கு கடந்த மாதமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.