நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

அறந்தாங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் விவரங்களைப் பொருத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு .அருணா.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:20 am IST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அந்தந்தத் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் இப்பணிகள் நடைபெற்றன. முறையான பெயா் வரிசைப்படி அவற்றைப் பொருத்துவதை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.

அறந்தாங்கியில் நடைபெற்ற பணியை, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் விஜயபாஸ்கா் ரெட்டியும் இப்பணிகளைப் பாா்வையிட்டாா்.

ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அ. ஷோபா, அறந்தாங்கி தோ்தல் நடத்தும் அலுவலா் அபிநயா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

அதேபோல, விவிபாட் கருவியிலும் பெயா், சின்னங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. அவற்றை மாதிரி வாக்குப்பதிவு செய்து சரி பாா்த்தும், உரிய பாதுகாப்பு வைப்பறைகளில் அதிகாரிகள் வைத்தனா்.

இந்தப் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனா்.

இரு தொகுதிகளில்...புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 30 வேட்பாளா்களும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். பொதுவாக, ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேரின் விவரங்களைப் பொருத்த முடியும்.

எனவே, இவ்விரு தொகுதிகளில் மட்டும் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. மற்ற 4 தொகுதிகளிலும் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.