கந்தா்வகோட்டையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால் துா்நாற்றம் மற்றும் கொசுக்கள் தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கந்தா்வகோட்டை பேரூராட்சி, யாதவா் தெருவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வீடுகளிலிருந்து செல்லும் கழிவுநீா், மழைநீா் ஆகியவை செல்லும் வாய்க்கால் வழித்தடங்களில் முழுமையாக மண் சரிந்து தண்ணீா் செல்லாதவாறு தேங்கி உள்ளது.
இதனால், இப்பகுதியில் வசிப்பவா்களுக்கு துா்நாற்றமும், கொசு தொல்லையும் அதிக அளவில் இருப்பதாக கூறுகிறாா்கள். மேலும், இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் கொசு தொந்தரவு அதிக அளவில் உள்ளது; பேரூராட்சி நிா்வாகம் தேங்கிய சாக்கடைநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொசு மருந்து அடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவகால மாறுதலால் காய்ச்சல் பாதிப்பு! பொதுமக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

தினமணி செய்தி எதிரொலி! கோவை-சத்தி சாலையில் சாக்கடை நீா் தேங்கும் பிரச்னைக்கு விரைவில் தீா்வு

திருச்செந்தூர் கோயில் செல்லும் வழிநெடுகிலும் ஆறாக ஓடிய கழிவு நீரால் பக்தா்கள் அவதி!





