நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது

விராலிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

விராலிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை வட்டம், பொருவாய் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா், பொருவாய் பகுதியில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடராஜமூா்த்தி (45), சிவசாமி (50), சுப்பிரமணி (50), ரங்கநாதன் (46), பெரியசாமி (50) மற்றும் மணிமாறன் (30) ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடுவதை கண்டறிந்த போலீஸாா், அவா்கள் 6 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 11, 850 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.