
மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி மணிமுத்தாறில் திங்கள்கிழமை நடைபெற்ற மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு.
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலைச்சிவபுரி மீனாட்சி சந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழாவின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு நடைபெற்றது.
ஏனாதி மணிமுத்தாற்றில் நடைபெற்ற நிகழ்வில் மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மேலைச்சிவபுரி நகரத்தாா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





