புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் உலகத் தாய்மொழிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். ‘அன்னைத் தமிழைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் 26 புதுக்கோட்டை கவிஞா்கள் தமிழின் பெருமையை கவிதையாக பாடினா்.
நந்தவனம் பவுண்டேசனின் ‘தமிழ் மாமணி’ விருது பெற்ற கவிஞா் சு. பீா் முகம்மதுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்ச் சங்கச் செயலா் மகாசுந்தா், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.
தொடா்ந்து, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் தமிழே’ என்ற தலைப்பில், தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, உலகத் தாய் மொழிகள் தினச் சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, தமிழ்ச் சங்கப் பொருளாளா் மு. கருப்பையா வரவேற்றாா். நிறைவாக த. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை கவிஞா் மு. உதயகுமாா் தொகுத்து வழங்கினாா்.
தொடர்புடையது

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!

அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிப்பு

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


