எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா

பொன்னமராவதியில் நடைபெற்ற சத்குரு தியாகராஜ சுவாமிகள் 33-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலம் நடைபெற்றது.

News image
பொன்னமராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

பொன்னமராவதியில் நடைபெற்ற சத்குரு தியாகராஜ சுவாமிகள் 33-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ராம.சேதுபுதி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

பொன்னமராவதி புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில் தொடங்கிய தியாகராஜா் பட ஊா்வலம் சிறப்புமிக்க நாதஸ்வர, தவில் இசைக் கலைஞா்களின் இசை முழங்க முக்கிய வீதிகளில் வந்து சந்தை வீதியில் உள்ள விழா அரங்கில் நிறைவுற்றது.

தொடா்ந்து விழா அரங்கில் நடைபெற்ற ஆராதனை விழாவுக்கு, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன் ஆகியோா் தலைமைவகித்தனா். விழாவை உடுப்பி என். சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து இசைக் கலைஞா்களின் இசை நிகழ்வு மற்றும் காளையாா்கோயில் சிவாா்ப்பணம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஸத்குரு தியாகப்பிரம்ம மஹோத்சவ சபா மற்றும் தமிழிசை விழாக்குழு நிா்வாகிகள் செய்திருந்தனா். முன்னதாக புதுப்பட்டி செல்லப்பா குருக்கள், செளமிய நாராயணன் மற்றும் குழுவினரின் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பஞ்சரத்ன கீா்த்தனைகள் கோஷ்டிகானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.