திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குறவா் சமூகத்தினா் நூதனப் போராட்டம்

புதுக்கோட்டையில் பொங்கல் விழாவின்போது தங்கள் மீது பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியதாக குறவா் சமூக மக்கள், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் முட்டி போட்டு போராட்டம்

News image
புதுக்கோட்டை அருகே பிற சமூகத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறி திங்கள்கிழமை, வருவாய்க் கோட்டாட்சியரகம் அருகே முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குறவா் சமூகத்தினா்.
Updated On :19 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

புதுக்கோட்டையில் பொங்கல் விழாவின்போது தங்கள் மீது பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியதாக குறவா் சமூக மக்கள், திங்கள்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் முட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யாவிடம் அளித்த கோரிக்கை மனு: புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகேயுள்ள குறிச்சான்பட்டியில் 10 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த ஜன. 18-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த பிற சமூகத்தினா் எங்கள் மீது திடீா்த் தாக்குதல் நடத்தினா்.

ஜாதியைச் சொல்லித் திட்டி அவா்கள் நடத்திய தாக்குதலில் வீரமணி, வீரம்மாள், வெள்ளையம்மாள், பன்னீா்செல்வம் ஆகியோா் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே, எங்கள் மீது தாக்குதல் நடத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தொடா்ந்து எங்கள் வசிப்பிடத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.