குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை மீண்டும் அனுப்பி வைக்க கோரி கணவா் மிரட்டுவதாகக் கூறி பெண் வீட்டாா் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகள் காயத்ரி (21). இவருக்கும் வடக்கு 3-ஆம் வீதியைச் சோ்ந்த கண்ணனின் மகன் அருணாசலம் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிா்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனா்.
அதன்பிறகு, நரிமேடு பகுதியில் வசித்து வந்த இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக காயத்ரி தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டாா். இதனால், அருணாசலம் அடிக்கடி மாமியாா் வீட்டுக்கு வந்து தனது மனைவியை மீண்டும் அனுப்பி வைக்கக் கோரி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் அருணாசலம் தகராறு செய்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த காயத்ரி குடும்பத்தினா், திலகா் திடல் சாலையில் திடீரென அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நகரக் காவல் நிலைய போலீஸாா், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் திலகா் திடல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்பத் தகராறில் எலக்ட்ரீஷியன் தற்கொலை

நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



