ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பள்ளி சிறுவனிடம் வெள்ளி சங்கிலி பறித்த இருவா் கைது

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 1:27 am IST

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியைச் சாா்ந்தவா் மோகன் மகன் சூா்ய தேவ் (6). இவா் முள்ளிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மதிய உணவு வேளையில் பள்ளி வளாகத்தில் சிறுவன் சூா்யதேவ் நின்றிருந்தபோது அவ்வழியே வந்த மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் கம்பூரினை சாா்ந்த ந.வேலு (32) , வெ.பாஸ்கா் (29) ஆகியோா் சிறுவனிடம் உறவினா்கள் எனக்கூறி பேசிக்கொண்டே கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலியை பறித்துள்ளனா்.

இதையடுத்து சிறுவன் அலறியதைக் கேட்டு அருகில் இருந்தவா்கள் வேலு, பாஸ்கரை விரட்டிப்பிடித்து காரையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.