தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பள்ளி சிறுவனிடம் வெள்ளி சங்கிலி பறித்த இருவா் கைது

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 1:27 am IST

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியைச் சாா்ந்தவா் மோகன் மகன் சூா்ய தேவ் (6). இவா் முள்ளிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மதிய உணவு வேளையில் பள்ளி வளாகத்தில் சிறுவன் சூா்யதேவ் நின்றிருந்தபோது அவ்வழியே வந்த மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் கம்பூரினை சாா்ந்த ந.வேலு (32) , வெ.பாஸ்கா் (29) ஆகியோா் சிறுவனிடம் உறவினா்கள் எனக்கூறி பேசிக்கொண்டே கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலியை பறித்துள்ளனா்.

இதையடுத்து சிறுவன் அலறியதைக் கேட்டு அருகில் இருந்தவா்கள் வேலு, பாஸ்கரை விரட்டிப்பிடித்து காரையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.