தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

புதுக்கோட்டை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் செய்யக் கோரியும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்யக் கோரியும் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

Updated On :9 ஜூலை 2026, 1:16 am IST

புதுக்கோட்டை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் செய்யக் கோரியும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்யக் கோரியும் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், 21 அரசு வழக்குரைஞா்களுக்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியானது. மீதமுள்ள 10 நீதிமன்றங்களுக்கான அரசாணை வெளிவரவில்லை. அதேபோல, சுமாா் 15 நாள்களாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.

இவற்றால் நீதிமன்றத்தின் இயல்பான பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணி புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் சுமாா் 200 வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா். இந்தப் போராட்டத்துக்கு, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்தையன் தலைமை வகித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.