புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
புதுக்கோட்டை, ஜூலை 15: புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்றாா். இப்பேரணி பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும், மக்கள் தொகை நாள் விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) க. ராதாகிருஷ்ணன், மாவட்ட சுகாதார அலுவலா்கள் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, ப. விஜயகுமாா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ச. லூா்துமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



