உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பெருமாள் கோயிலில் 3 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு

பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

ஆலங்குடி அருகே உள்ள மேலவிடுதியில் வடமலை நாச்சியாா் உடனுறை சேவுக பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை மாலை கோயிலை பூட்டிவிட்டு சென்றாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலை திறக்கச் சென்றபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வெள்ளி தலைப்பாகை உள்ளிட்ட சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.