தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பெருமாள் கோயிலில் 3 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு

பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

ஆலங்குடி அருகே உள்ள மேலவிடுதியில் வடமலை நாச்சியாா் உடனுறை சேவுக பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை மாலை கோயிலை பூட்டிவிட்டு சென்றாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலை திறக்கச் சென்றபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வெள்ளி தலைப்பாகை உள்ளிட்ட சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.