மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இரு நடமாடும் நியாயவிலைக் கடைகள் சேவைகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்

News image

இறையாத்திமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் அங்காடியைத் தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்த மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ்

Updated On :20 ஜூலை 2026, 1:40 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவுடையாா்கோவில் வட்டத்தில் இரு இடங்களில், நடமாடும் நியாயவிலைக் கடைகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவுடையாா்கோவில் வட்டம், துஞ்சனூா் ஊராட்சி பொதுவக்கூட் கிராமத்திலும், பொன்பேத்தி ஊராட்சி இறையாமங்கலம் கிராமத்திலும் இந்த நடமாடும் அங்காடிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

மேலும், இறையாமங்கலத்தில் உலமாக்கள் நலவாரியம் மூலம் 5 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மானியத்துடன் இரு சக்கர வாகனங்களையும் அமைச்சா் வழங்கினாா். மேலும் 20 பேருக்கான மின்னணு குடும்ப அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் இ. அபிநயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ராஜவேல், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.