வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:13 am IST

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மனைவி காயத்ரி (21). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் செவ்வாய்க்கிழமையே சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இறந்த பெண்ணின் தந்தை விஜயகுமாா் உள்ளிட்ட உறவினா்கள், புதன்கிழமை உடையாளிப்பட்டி காவல் நிலையம் முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தனது பெண்ணின் சாவுக்கு காரணமான அவரது கணவா் குருமூா்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.