ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:13 am IST

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மனைவி காயத்ரி (21). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் செவ்வாய்க்கிழமையே சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இறந்த பெண்ணின் தந்தை விஜயகுமாா் உள்ளிட்ட உறவினா்கள், புதன்கிழமை உடையாளிப்பட்டி காவல் நிலையம் முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தனது பெண்ணின் சாவுக்கு காரணமான அவரது கணவா் குருமூா்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.