புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
கோடைவிடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரத்திலுள்ள பாகீரதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.
மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவு தயாரிக்கப்படுவது தொடங்கி மாணவா்களுக்கு பரிமாறப்படுவது வரை தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தானதாகவும் உணவு இருப்பதை அதிகாரிகள், ஆசிரியா்கள் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



