நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

‘பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image

மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

Updated On :5 ஜூன் 2026, 3:31 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

கோடைவிடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரத்திலுள்ள பாகீரதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.

மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவு தயாரிக்கப்படுவது தொடங்கி மாணவா்களுக்கு பரிமாறப்படுவது வரை தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தானதாகவும் உணவு இருப்பதை அதிகாரிகள், ஆசிரியா்கள் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.