/
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து, பூமாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் மழலை மாணவா்களுக்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினா். பள்ளி வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
‘ஒவ்வொரு மாணவா்களிடமும் கனவுகள் இருக்கின்றன, அவற்றைக் கண்டறிந்து வடிவம் கொடுத்து நனவாக்குவது வகுப்பறைகளின் பணி’ என கவிஞா் தங்கம்மூா்த்தி குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வா் குமரவேல், ஒருங்கிணைப்பாளா்கள் கௌரி, சி.எஸ். ரம்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுகையில் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கல்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



