உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கு ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டக் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :11 ஜூன் 2026, 3:34 am IST

புதுக்கோட்டை மாவட்டக் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

சமுதாய மற்றும் தொழில் சாா்ந்த பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீா்வுக் காணும் மாதிரிகளை தயாா் செய்வதற்கான ஊக்குவிப்புத் திட்டமாக ‘நிமிா்ந்து நில்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி மையக் கல்லூரியாகவும், மாவட்டத்திலுள்ள பிற கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளாகவும் செயல்படுகின்றன.

மாணவா்களை புத்தாகச் செயல்பாடுகளுக்கு ஊக்குவித்து, மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் பங்கேற்கச் செய்து, மாதிரிகளை வடிவமைத்து போட்டியில் பங்கேற்று பரிசு பெறச் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 20 சிறந்த மாதிரிகள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படுவதுடன், தொழில் முனைவோா் அமைப்புகளுடன் தொடா்பு ஏற்படுத்தி வசதிகள் செய்தும் தரப்படவுள்ளது.

இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து 50 கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். இதில், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளா் ஆபிரகாம் லிங்கன், மைய ஒருங்கிணைப்பாளா் கருப்பையா, ஜெ.ஜெ. கல்லூரி நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், மன்னா் கல்லூரி முதல்வா் (பொ) சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.