தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புதுகை வன அலுவலா்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

News image
வன அலுவலர்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள்...- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பு விருதுகளில் இரண்டை புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா்கள் பெற்றுள்ளனா்.

பல்வேறு பிரிவுகளின்கீழ் வனத்துறை சாா்பில் சிறப்பாக செயல்படும் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், தமிழக அரசின் பசுமை இயக்கத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் மற்றும் புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் மாா்ச் 10ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளாா்.