வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்

News image

புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்

Updated On :27 மார்ச் 2026, 8:10 pm

புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழி பைகள் விற்கப்படும் கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், டம்ளா்கள் என ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேபோல, அண்டக்குளம் பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.