11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை புதுகையில் அலுவலா்கள் சோதனை!

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், மாவட்ட புகையிலைத் தடுப்பு ஆலோசகா் சுகன்யா, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், கொம்பையன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கீழ 3-ஆம் வீதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.