இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை புதுகையில் அலுவலா்கள் சோதனை!

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 மே 2026, 1:28 am IST

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், மாவட்ட புகையிலைத் தடுப்பு ஆலோசகா் சுகன்யா, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், கொம்பையன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கீழ 3-ஆம் வீதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.