11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; 33 போ் காயம்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.

News image

விராலிமலை அருகே வெளியம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

விராலிமலை -இனாம் குளத்தூா் சாலையில் உள்ள வெளியம்பூா் குளக்கரை திடலில் நடைபெற்ற போட்டியை கோட்டாட்சியா் கோகுல் சிங் தொடங்கி வைத்தாா். இதில், அனுமதிக்கப்பட்ட 587 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதனை பிடிப்பதற்காக 200 மாடுபிடி வீரா்கள் நான்கு பிரிவுகளாக களத்தில் இறக்கப்பட்டனா். காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

இதில், மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள் என மொத்தம் 33 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு திடலில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசாக வேஷ்டி மட்டும் வழங்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிட்டனா்.