/
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செம்பட்டிவிடுதி அருகேயுள்ள கம்மங்காடு மேலப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மாரியாயி (63).
இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின்விசிறியை போடுவதற்காக ஸ்விட்சை தொட்டபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.









