தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமித் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய் நூல் வெளியிடப்பட்டது.
மஞ்சக்குடி தயானந்த கல்வி அறக்கட்டளை சார்பில் அச்சிடப்பட்ட முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோவில் (ராஜராஜேச்சரம்) என்ற நூலை சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் இரா. நாகசாமி பெற்றுக் கொண்டார். மடாதிபதிகள் நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
இந்த நூலில் பெரியபுராணத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் அனுமந்த தாராசுரம் திருக்கோவில் 108 ஓதுவார்களின் உருவச் சிற்பங்கள் கல்வெட்டு பொறிப்புகளுடன் இருப்பது பற்றியும், திருநாவுக்கரசர் திருவையாறில் பாடிய மாதற் பிறைக் கண்ணியானை எனத் தொடங்கும் 11 பாடல்களில் உள்ள அப்பதிகத்துக்கென 11 சிற்பக் காட்சிகள் அக்கோவிலில் இருப்பது பற்றியும், கட்டடக்கலை, சிற்பம் உள்ளிட்டவை குறித்தும் நூலாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? சிபிஎம் எம்ஏ பேபி பதில்

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
