மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூல் வெளியீடு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமித் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய் நூல் வெளியிடப்பட்டது.

Updated On :14 நவம்பர் 2013, 1:07 am IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமித் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய் நூல் வெளியிடப்பட்டது.

மஞ்சக்குடி தயானந்த கல்வி அறக்கட்டளை சார்பில் அச்சிடப்பட்ட முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோவில் (ராஜராஜேச்சரம்) என்ற நூலை சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் இரா. நாகசாமி பெற்றுக் கொண்டார். மடாதிபதிகள் நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

இந்த நூலில் பெரியபுராணத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் அனுமந்த தாராசுரம் திருக்கோவில் 108 ஓதுவார்களின் உருவச் சிற்பங்கள் கல்வெட்டு பொறிப்புகளுடன் இருப்பது பற்றியும், திருநாவுக்கரசர் திருவையாறில் பாடிய மாதற் பிறைக் கண்ணியானை எனத் தொடங்கும் 11 பாடல்களில் உள்ள அப்பதிகத்துக்கென 11 சிற்பக் காட்சிகள் அக்கோவிலில் இருப்பது பற்றியும், கட்டடக்கலை, சிற்பம் உள்ளிட்டவை குறித்தும் நூலாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.