அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலையோர கடை வைக்க அனுமதி வேண்டும்

அறந்தாங்கி -பேராவூரணி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி  கடை வைத்துக் கொள்ள அனுமதி கோரி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:56 am

DIN

அறந்தாங்கி -பேராவூரணி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி  கடை வைத்துக் கொள்ள அனுமதி கோரி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 
இதுகுறித்து அறந்தாங்கி சாலையோர தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அ. ராஜேந்திரன் தலைமையில்  அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பி.வி. சரவணன்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரிடம் அளித்த மனு விவரம்:
அறந்தாங்கியில் பல்லாண்டுகளாக சாலையோரம் தரைக்கடை அமைத்து  வியாபாரம் செய்து வந்தோம்.  தற்போது போக்குவரத்து இடையூறு எனக் காரணம் கூறி கடை அமைக்க போலீஸார்  அனுமதி தரவில்லை.   ஆகவே எங்களுக்கு வாரச்சந்தை நடைபெறும் 2-ஆவது கேட்பகுதியில்  கடை அமைத்து நகராட்சி வசூலிக்கும் தொகையை  சத்திரம் நிர்வாகமும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை வைக்க மேற்கூரை அமைத்து வாடகை வசூலிக்காமல்  இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலையோரங்களில் கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.