பொன்னாப்பூரில் டெங்கு தடுப்பு பணி: ஆட்சியர் ஆய்வு

ஒரத்தநாடு ஒன்றியத்துக்குட்பட்ட  பொன்னாப்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

ஒரத்தநாடு ஒன்றியத்துக்குட்பட்ட  பொன்னாப்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னாப்பூர் ஊராட்சி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பொதுமக்களிடம் கொசு உற்பத்தி ஆகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், தண்ணீர் தேங்கக்கூடிய மாவரைக்கும் குடக்கல், தேங்காய் சிரட்டை, டயர்கள்,பிளாஸ்டிக் கப் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com