ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தஞ்சாவூரில் வழக்குரைஞர்கள்  மனிதச் சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:38 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் மனிதச் சங்கிலி: தஞ்சாவூர் காந்திஜி சாலையில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, காந்திஜி சாலையில் இரட்டை மஸ்தான் தர்கா பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கச் செயலர் பாலமுரளி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் கும்பகோணம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் வழக்குரைஞர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
பாபநாசத்தில்... பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வழக்குரைஞர்கள் சங்க வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்குரைஞர்கள் சங்க தலைவர் என்.பாஸ்கரன் தலைமையில்,  செயலாளர் ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.