காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தஞ்சாவூர் மாவட்டத் தலைவி சாஜிதாபானு தலைமை வகித்தார். இதில், நம் நாட்டில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளித்திட வேண்டும். நாட்டில் நிகழும் பாலியல் வன்முறைகளை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற வேண்டும்.
காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆயிஷாபேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷர்மிளாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


