பாபநாசம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிட்டுசாமி, அரசு போக்குவரத்துக் கழக தொழில் நுட்ப மேலாளர்ஆதப்பன், உதவி ஆய்வாளர்கள் கலைசெல்வன், முத்துகுமார் உள்ளிட்டோர் பேசினர். தஞ்சாவூர் பாரத மாதா கலைக் குழு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.