சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அலமேலுபுரம் பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அக்கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அலமேலுபுரம் பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அக்கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அலமேலுபுரம் பூண்டி கிராம விவசாயிகள் ஆர். ராமதாஸ் மற்றும் வழக்குரைஞர் வெ. ஜீவகுமார் தலைமையில் அளித்த மனு: அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் ஆழ்குழாய் மூலம் சுமார் 300 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. 
ஆனால், விவசாயிகளை வியாபாரிகள் ஏமாற்றி மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. 
விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் ஓரளவுக்குப் பயனடைவர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.