வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கலாசாரம் மிக்க பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்: வெங்கய்ய நாயுடு மகள் பேட்டி

பாரம்பரிய,  கலாசாரம் மிக்க தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா வெங்கட்.

Updated On :5 நவம்பர் 2018, 9:17 am IST

பாரம்பரிய,  கலாசாரம் மிக்க தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா வெங்கட்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மனைவி உஷா,  அவரது மகள் தீபா வெங்கட்,  பேரன் விஷ்ணு,  பேத்தி சுஷ்மா மற்றும் உறவினர்கள் ஆகியோர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள், அங்குள்ள ஓவியங்கள், கட்டட அமைப்புகள் உள்ளிட்டவற்றை சுமார் 2 மணி நேரம் கண்டு ரசித்தனர். 
இதைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபாவெங்கட் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சை பெரிய கோயிலின் கட்டட கலை அமைப்பை தமிழில் அதி அற்புதம் என்று கூறினால் தகும். நிறைய செலவு செய்து பலர்,  வரலாற்று ஆவணங்கள் இல்லாத வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். நிறைந்த பாரம்பரிய வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் நமது நாட்டிலேயே உள்ளன.
தமிழகத்தை ஆண்ட சோழர்கள்,  நாயக்கர்கள் கால ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓவியங்கள், கட்டடக் கலை அமைப்பைக் கொண்ட தஞ்சை பெரிய கோயில் வியப்பில் ஆழ்த்துகிறது. எவ்வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு வியத்தகு கட்டடத்தை கட்டி,  நமது நாட்டின் பாரம்பரியம்,  கலாசாரத்தை காத்துள்ளது சாதாரண விஷயமல்ல. இது இந்தியர்களால் மட்டுமே முடியும்.
தொன்மை வாய்ந்த நமது நாட்டின் சிலைகள் இந்திய திருநாட்டிற்கே சொந்தம்.  தனி ஒருவருக்கு சொந்தமானதல்ல. எனவே, சிலைகளை பாதுகாப்பது நமது கடமை. 
நமது தொன்மை சின்னங்களான சிலைகள் யாரிடமாவது கிடைத்தால்,  அவற்றை தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும். 
கலாசார பெருமை மிக்க சபரிமலைக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்வதில்லை. பண்டைய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பின்பற்றும் நான் உள்பட தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் தீபா வெங்கட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.